மனசும் மனசாட்சியும் வேறல்ல. காலையில் எழுந்து உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும் மனசு, காலையில் அலாரம்அடித்தவுடன் நேற்று இரவு அதிக நேரம் முழித்திருந்தாய், இன்னும் சற்று நேரம் உறங்கு மனசு, உறங்கி 7 மணிக்கு எழுந்தவுடன் மனசு இப்படியே சோம்பேறியாக இரு, தொப்பை பெரிதாகட்டும் என்று திட்டும் போதுமனசாட்சி.
ஒருவர் உதவி கேட்கும் பொழுது உதவாதே என்று தடுப்பது மனசு அவர் போன பிறகு அவருக்கு நீ உதவியிருக்கவேண்டும் என்று மனசு திட்டும்போது அது மனசாட்சியாக பார்க்கப்படுகிறது.
எது அலாரம் அடிக்கும் பொழுது உன்னை தூங்க சொல்கிறதோ, அதுவே நீ 7 மணிக்கு எழும்போழுதுதிட்டுகிறது. எது உன்னை உதவ விடவில்லையோ அதுவே சிறிது நேரம் கழித்து உன்னை நீ உதவியிருக்க வேண்டும் என்றுதிட்டுகிறது. எனவே it is the same culprit.
எனவேதான் இந்து மதம் you are not the body and you are not the mind both are illusion என்கிறது. மேலைநாடுகளில் Thinkerகளை அறிஞர்கள் என்று போற்றுவார்கள் ஆனால் இந்து மதம் எண்ணங்களற்று இரு என்றுஅறிவுறுத்தும்.
மேலை நாட்டு அறிஞர்கள் தனிமையில் இருந்து தீவிரமாக think செய்த பொழுது, இந்து மதம் நீ தனிமையில்இருந்து தியானம் செய் என்று அறிவுறுத்தியது,
Meditation என்றால் என்ன? தனியே அமரந்து எண்ணங்களைஅகற்றி, எண்ணமில்லாமல் இருப்பது. பெரும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் மனமற்ற நிலையில்தான் நிகழ்ந்தன என்று J. Krishnamurti சொல்வார்.
மனம் என்ற ஒன்று ஒரு false entity என்று இந்து மதம் சொல்லுகிறது மற்ற எல்லா மதமும் மனதை ஒரு true entity ஆக கருதி இப்படி வாழ் இப்படி வாழாதே, மீறினால் நீ தண்டிக்கபடுவாய், சொன்னபடி வாழ்ந்து செத்தால்உனக்கு reward ஆக இன்ன இன்ன கிடைக்கும் என்பதோடு நின்றுவிடும் அதற்கு மேலே போனதாக எனக்குதெரியவில்லை.
இந்து மதத்திலும் சொர்கம், நரகம் என்ற நம்பிக்கை உள்ளது ஆனால் இந்து மதத்தில் அது ஓரு elementary school level போலத்தான்கருதப்படும். எப்படி அம்மா தன் சிறு வயது மகனிடம் நீ இருட்டில் தனியே போனால் உன்னை பூச்சாண்டிபிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று சொல்லி வீட்டிலேயே இருக்க வைப்பாளோ அது போல இந்து மதம்ஒரு கட்டம் வரைதான் பக்குவம் குறைந்தவர்களுக்கு ஏற்றபடி சொர்கம் நரகத்தை காட்டி அவனை ஒழுங்காகவாழ பழக்குகிறது ஆனால் அதற்கு மேலும் இந்து மதம் செல்கிறது என்று பெரும்பாலான இந்துக்களுக்குதெரியாது.
மூச்சுக்கும் மனதுக்கும் சம்பந்தம் உள்ளது என்று சொல்லி பிராணாயமம் வழியாக மனதை அடக்க முடியும்என்றது, ஒருவர் கோபம் கொள்ளும் பொழுது மூச்சு தாறுமாறாக எகிறும் என்பது நமக்கு தெரிந்த ஒன்று, கோபம் எண்ணம் அதற்கு மூச்சை வேகமாக மாற்றும் வல்லமை உண்டு எனவே ரிவர்ஸ் பிராசஸில் மூச்சைபழக்கினால் மனதை தன் வசப்படுத்தலாம் என்று அறிவுறுத்தியது.
அதற்கு மேலே சென்று அத்வைததில் உலகம், உடம்பு, மனம், தெய்வம் எல்லாம்பொய் என்று PhD Levelலுக்குபோய்விடும். ஆனால் அது கற்று தர பக்குவப்பட்ட மனிதர்களுக்கே குரு தானாக வந்து சேர்வார்கள் என்பது நம்பிக்கை
உதாரணத்திற்கு இராமக்கிருஷ்ண பரமஹம்சர் சர்வ சாதாரணமாக கல்கத்தா காளியோடு பேசக்கூடியவர், அவருக்கு தோத்தாபுரி என்ற ஞானி குருவாக வந்து சேரந்தார். அவர் நீ இன்னும் பக்குவப்படவில்லை எனவேநாளையில் இருந்து என்னிடம் வா உனக்கு உயர்ந்த ஞானத்தை சொல்லி தருகிறேன் என்றார்.
இங்கு கவனிக்க வேண்டியது மற்ற மதங்களில் இறைவனோடு பேசுபவர்களை இறை தூதர் என்று அழைத்து அவர் தான் தங்கள் saviour என்பார்கள் இங்கு
தோத்தாபுரி காளியோடு பேசும் இராமக்கிருஷ்ணரை்பார்த்து நீ இன்னும் பக்குவப்படவில்லை, நீ இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவே நாளையில்இருந்துஎன்னிடம் வந்து பாடம் படி என்கிறார். ஒரு இறை தூதரிடம் பேச வேண்டிய பேச்சா இது ?
உடனே இராமகிருஷ்ணர் நான் காளியோடே நேருக்கு நேர் பேசுபவன் நீ என்னத்த எனக்கு சொல்லிதரப்போற? என்று கேட்காமல், நான்
காளியிடம் அனுமதி கேட்கிறேன் அவள் போக சொன்னால் வருகிறேன் என்று சொல்ல தாராளமாக கேள்என்கிறார் தோத்தாபுரி.
இராமகிருஷ்ணர் காளியிடம் நடந்த விஷயத்தை கூற, மகனே நான்தான் அவனை அனுப்பினேன் போய்கற்றுக்கொள் என்கிறாள். இவரும் தோத்தாபுரியிடம் வந்து காளி அனுமதி கொடுத்து விட்டாள் என்று சொல்ல, இராமக்கிருஷ்ணரை தியானத்தில் அமரவைத்து என்ன தெரிகிறது என்று கேட்டார், காளி தெரிகிறாள் என்றார், காளியை நினைக்காதே என்றார் தோத்தாபுரி அது எப்படி முடியும் காளி சிரித்துக்கொண்டு இருக்கிறாள் என்றார்இராமக்கிருஷ்ணர்.
அதற்கு தோத்தாபுரி ஓரு நீண்ட கொடு வாளை எடுத்து காளியின் நடுமண்டையில் வேகமாக இறக்கி அந்தஉருவத்தை இரண்டாக பிளந்து விடு என்கிறார் அதை குரு சொல்கிறார் என்று இராமக்கிருஷ்ணர் அவர்சொல்லை தட்டாமல் தன் அபிமான காளி உருவத்தை மனதில் கொடுவாள் கொண்டு இரண்டாக பிளக்க காளிஉருவம் சுக்கல் சுக்கலாகி மறைவதுடன் இராமக்கிருஷ்ணர் மனம் கரைந்து, காலம், உலகம், எல்லாம் அற்றுபோய் அவர் வேறு பிரபஞ்சம் வேறு என்ற நிலை இல்லாமல் இரண்டற்று நின்றார்.
இதைதான் ஞான நிலை என்றஉயரிய நிலை என்று இந்து மதம் சொல்கிறது. உருவமற்ற உண்மையை உணர நீயும் உருவற்று போனால் தான்உணரமுடியும், இன்னும் கேட்டால் ஒரு படி மேலே போய் அந்த நிலையில் உணரக்கூடிய ஒருவர் அவரால்உணரக்கூடிய வஸ்து என்று இரண்டில்லை என்கிறது. துவைத்தம் என்றால் இரண்டு அத்வைத்தம் என்றால்இரண்டல்ல என்று பொருள்.
மதம் மாற்றுபவர்கள் இந்து மதத்தில் எத்தனை தெய்வங்கள் என்று கேளிபேசி எங்கள் மதம் உருவ வழிபாட்டைஎதிர்கிறது என்பார்கள். ஆனால் இந்து மதம் ஒரு perfect equation கணித சமண்பாடு போல நீ உருவத்தோடு இருப்பதாக நம்பினால் உருவமில்லாத வஸ்துவை நீ பார்க்க முடியாது( இறைவனை பார்க்கமுடியாது என்று கூடஇந்து மதம் சொல்ல விடவில்லை, இறைவன் என்றாலே ஆண்விகுதி (male gender) வந்து விடும் அதுஉருவத்தை கொடுத்து விடும்).
As long as நீ உன்னை உடல் என்று கருதுகிறாயோ equation னுடைய அடுத்த sideல் இறைவனை நீ உருவத்தோடு தான் கருதமுடியும். உருவமற்ற (வஸ்துவை) ஒன்றை பார்க்க நீயும்உருவற்றவனாக dissolve ஆகவேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.
(பார்பது என்பது இங்கே புரிவதற்காகஎழுதுகிறேன், உண்மையில் ்அங்கு பார்ப்பவன் பார்க்க கூடிய வஸ்து என்று இரண்டில்லாமல் உள்ளநிலைதான் உள்ளது)
எனவே LHS = RHS
மனித உருவம் = கடவுள் உருவம்
உருவமில்லை = உருவமில்லை
எனவே உருவமில்லை ஒன்று மட்டுமே நிற்கிறது அ்அங்கு மனிதனில்லை கடவுள் இல்லை என்றாகிறது.
எனவேதான் இந்து மதம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்கிறது, கடவுள் படைத்த ஒன்று கடவுள்அம்சமாகத்தான் இருக்கும், you are the part of the whole என்கிறது, என்று உடல்,மனம், உருவம் என்பதைகடந்து part ஆன நீ whole ஆகிறாயோ அன்று நீ தெய்வ நிலை அடைகிறாய் என்று சொன்னது மற்ற மதங்கள்அதை ஒத்துக்கொள்ளவில்லை, மனிதன் எந்த நாளும் தெய்வம் ஆக முடியாது என்று திண்ணமாக கருதுகிறது.
எனவே இந்து மதம் ஜாதியை ஊக்குவிக்கிறது ஏற்ற தாழ்வை விதைக்கிறது என்று பழி சொல்லுபவர்கள், இங்குகவனிக்க வேண்டியது மனிதன் இறைதன்மை பெறமுடியும் என்று ஏற்ற தாழ்வை கடவுள் விஷயத்திலேயே இந்துமதம் காண்பிக்க வில்லை ஆனால் மற்ற மதங்கள் இறைவனுக்கும் மனிதனுக்குமே ஏற்ற தாழ்வை காண்பித்துஒரு நாளும் மனிதன் இறைவன் நிலைக்கு உயரமுடியாது என்று உறுதியாக அடித்து கூறுகிறது.
நான் இங்கு இதை எழுதுவது மற்ற மதத்தினரை புண்படுத்த அல்ல மதம் மாற்றுபவர்கள் எப்படி எல்லாம் இந்து மதத்தை சிறுமை படுத்துகிறார்கள் என்றும் அதுஎந்த அளவுக்கு பொய்யானது என்று விளக்கவே இந்த பதிவு.