Saturday, August 6, 2022

மதம் மாற்றுபவர்களுக்கு

மனசும் மனசாட்சியும் வேறல்லகாலையில் எழுந்து உடற்பயிற்ச்சி செய்ய வேண்டும் மனசுகாலையில் அலாரம்அடித்தவுடன் நேற்று இரவு அதிக நேரம் முழித்திருந்தாய்இன்னும் சற்று நேரம் உறங்கு மனசுஉறங்கி 7 மணிக்கு    எழுந்தவுடன் மனசு இப்படியே சோம்பேறியாக இருதொப்பை பெரிதாகட்டும் என்று   திட்டும் போதுமனசாட்சி

ஒருவர் உதவி கேட்கும் பொழுது உதவாதே என்று தடுப்பது மனசு அவர் போன பிறகு அவருக்கு நீ உதவியிருக்கவேண்டும் என்று மனசு திட்டும்போது அது மனசாட்சியாக பார்க்கப்படுகிறது

எது அலாரம் அடிக்கும் பொழுது உன்னை தூங்க சொல்கிறதோஅதுவே நீ 7 மணிக்கு எழும்போழுதுதிட்டுகிறதுஎது உன்னை உதவ விடவில்லையோ அதுவே சிறிது நேரம் கழித்து உன்னை நீ உதவியிருக்க வேண்டும் என்றுதிட்டுகிறதுஎனவே it is the same culprit. 

எனவேதான் இந்து மதம் you are not the body and you are not the mind both are illusion என்கிறதுமேலைநாடுகளில் Thinkerகளை அறிஞர்கள் என்று போற்றுவார்கள் ஆனால் இந்து மதம் எண்ணங்களற்று இரு என்றுஅறிவுறுத்தும்
மேலை நாட்டு அறிஞர்கள் தனிமையில் இருந்து தீவிரமாக think செய்த    பொழுதுஇந்து மதம் நீ தனிமையில்இருந்து தியானம் செய் என்று    அறிவுறுத்தியது,

 Meditation என்றால் என்னதனியே அமரந்து எண்ணங்களைஅகற்றிஎண்ணமில்லாமல் இருப்பதுபெரும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எல்லாம் மனமற்ற நிலையில்தான் நிகழ்ந்தன என்று J. Krishnamurti சொல்வார்


மனம் என்ற ஒன்று ஒரு false entity என்று இந்து மதம் சொல்லுகிறது மற்ற எல்லா மதமும் மனதை ஒரு true entity ஆக கருதி இப்படி வாழ் இப்படி வாழாதேமீறினால் நீ தண்டிக்கபடுவாய்சொன்னபடி வாழ்ந்து செத்தால்உனக்கு reward ஆக இன்ன இன்ன கிடைக்கும் என்பதோடு நின்றுவிடும் அதற்கு மேலே போனதாக எனக்குதெரியவில்லை

இந்து மதத்திலும் சொர்கம்நரகம் என்ற நம்பிக்கை உள்ளது ஆனால் இந்து மதத்தில் அது ஓரு elementary school level போலத்தான்கருதப்படும்எப்படி அம்மா தன் சிறு வயது மகனிடம் நீ இருட்டில் தனியே போனால் உன்னை பூச்சாண்டிபிடித்துக்கொண்டு போய்விடுவான் என்று சொல்லி வீட்டிலேயே இருக்க வைப்பாளோ அது போல இந்து மதம்ஒரு கட்டம் வரைதான் பக்குவம் குறைந்தவர்களுக்கு ஏற்றபடி சொர்கம் நரகத்தை காட்டி அவனை ஒழுங்காகவாழ பழக்குகிறது ஆனால் அதற்கு மேலும் இந்து மதம் செல்கிறது என்று பெரும்பாலான    இந்துக்களுக்குதெரியாது

மூச்சுக்கும் மனதுக்கும் சம்பந்தம் உள்ளது என்று சொல்லி பிராணாயமம் வழியாக மனதை அடக்க முடியும்என்றதுஒருவர் கோபம் கொள்ளும் பொழுது மூச்சு தாறுமாறாக எகிறும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுகோபம் எண்ணம் அதற்கு மூச்சை வேகமாக மாற்றும் வல்லமை உண்டு எனவே ரிவர்ஸ் பிராசஸில் மூச்சைபழக்கினால் மனதை தன் வசப்படுத்தலாம் என்று அறிவுறுத்தியது
அதற்கு மேலே சென்று அத்வைததில் உலகம்உடம்புமனம்தெய்வம் எல்லாம்பொய் என்று PhD Levelலுக்குபோய்விடும் ஆனால் அது கற்று தர    பக்குவப்பட்ட மனிதர்களுக்கே குரு தானாக வந்து சேர்வார்கள் என்பது  நம்பிக்கை

உதாரணத்திற்கு இராமக்கிருஷ்ண பரமஹம்சர் சர்வ சாதாரணமாக கல்கத்தா காளியோடு பேசக்கூடியவர்அவருக்கு தோத்தாபுரி என்ற ஞானி குருவாக வந்து சேரந்தார்அவர் நீ இன்னும் பக்குவப்படவில்லை எனவேநாளையில் இருந்து என்னிடம் வா உனக்கு உயர்ந்த ஞானத்தை சொல்லி தருகிறேன் என்றார்
இங்கு கவனிக்க வேண்டியது மற்ற மதங்களில் இறைவனோடு பேசுபவர்களை இறை தூதர் என்று அழைத்து அவர் தான் தங்கள் saviour என்பார்கள்  இங்கு 
தோத்தாபுரி காளியோடு பேசும் இராமக்கிருஷ்ணரை்பார்த்து நீ இன்னும்    பக்குவப்படவில்லைநீ இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் எனவே நாளையில்இருந்துஎன்னிடம் வந்து பாடம் படி என்கிறார்ஒரு இறை தூதரிடம் பேச வேண்டிய பேச்சா இது ? 

உடனே இராமகிருஷ்ணர் நான் காளியோடே நேருக்கு நேர் பேசுபவன் நீ என்னத்த எனக்கு சொல்லிதரப்போறஎன்று கேட்காமல்நான்
 காளியிடம் அனுமதி கேட்கிறேன் அவள் போக சொன்னால் வருகிறேன் என்று சொல்ல  தாராளமாக கேள்என்கிறார்  தோத்தாபுரி

இராமகிருஷ்ணர் காளியிடம் நடந்த விஷயத்தை கூற மகனே நான்தான் அவனை அனுப்பினேன் போய்கற்றுக்கொள் என்கிறாள் இவரும் தோத்தாபுரியிடம் வந்து காளி அனுமதி கொடுத்து விட்டாள் என்று சொல்லஇராமக்கிருஷ்ணரை தியானத்தில் அமரவைத்து என்ன தெரிகிறது என்று கேட்டார்காளி தெரிகிறாள் என்றார்காளியை நினைக்காதே என்றார் தோத்தாபுரி அது எப்படி முடியும் காளி சிரித்துக்கொண்டு இருக்கிறாள் என்றார்இராமக்கிருஷ்ணர்.

அதற்கு தோத்தாபுரி ஓரு நீண்ட கொடு வாளை எடுத்து காளியின் நடுமண்டையில் வேகமாக இறக்கி அந்தஉருவத்தை இரண்டாக பிளந்து விடு என்கிறார் அதை குரு சொல்கிறார் என்று இராமக்கிருஷ்ணர் அவர்சொல்லை தட்டாமல் தன் அபிமான காளி உருவத்தை மனதில் கொடுவாள் கொண்டு இரண்டாக பிளக்க காளிஉருவம் சுக்கல் சுக்கலாகி மறைவதுடன் இராமக்கிருஷ்ணர் மனம்    கரைந்துகாலம்உலகம்எல்லாம் அற்றுபோய் அவர் வேறு பிரபஞ்சம் வேறு என்ற நிலை இல்லாமல் இரண்டற்று நின்றார்

இதைதான் ஞான நிலை என்றஉயரிய நிலை என்று இந்து மதம் சொல்கிறது   உருவமற்ற உண்மையை உணர நீயும் உருவற்று போனால் தான்உணரமுடியும்இன்னும் கேட்டால் ஒரு படி மேலே போய் அந்த நிலையில் உணரக்கூடிய ஒருவர் அவரால்உணரக்கூடிய வஸ்து என்று இரண்டில்லை என்கிறதுதுவைத்தம் என்றால் இரண்டு அத்வைத்தம் என்றால்இரண்டல்ல என்று பொருள்

மதம் மாற்றுபவர்கள் இந்து மதத்தில் எத்தனை தெய்வங்கள் என்று கேளிபேசி எங்கள் மதம் உருவ வழிபாட்டைஎதிர்கிறது என்பார்கள்ஆனால் இந்து மதம்    ஒரு perfect equation கணித சமண்பாடு போல நீ உருவத்தோடு இருப்பதாக    நம்பினால் உருவமில்லாத வஸ்துவை நீ பார்க்க முடியாதுஇறைவனை பார்க்கமுடியாது என்று கூடஇந்து மதம் சொல்ல விடவில்லைஇறைவன் என்றாலே     ஆண்விகுதி (male genderவந்து விடும் அதுஉருவத்தை கொடுத்து விடும்).         

As long as நீ உன்னை உடல் என்று கருதுகிறாயோ equation னுடைய  அடுத்த  sideல் இறைவனை நீ உருவத்தோடு தான் கருதமுடியும்உருவமற்ற (வஸ்துவைஒன்றை பார்க்க நீயும்உருவற்றவனாக dissolve ஆகவேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.

 (பார்பது என்பது இங்கே புரிவதற்காகஎழுதுகிறேன்உண்மையில் ்அங்கு பார்ப்பவன் பார்க்க கூடிய வஸ்து என்று இரண்டில்லாமல் உள்ளநிலைதான் உள்ளது

எனவே LHS = RHS 
மனித உருவம் = கடவுள் உருவம்
உருவமில்லை = உருவமில்லை
எனவே உருவமில்லை ஒன்று மட்டுமே நிற்கிறது அ்அங்கு மனிதனில்லை    கடவுள் இல்லை என்றாகிறது
எனவேதான் இந்து மதம் மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்கிறதுகடவுள் படைத்த ஒன்று கடவுள்அம்சமாகத்தான் இருக்கும், you are the part of the whole என்கிறதுஎன்று உடல்,மனம்உருவம் என்பதைகடந்து part ஆன நீ whole ஆகிறாயோ அன்று நீ தெய்வ நிலை அடைகிறாய் என்று சொன்னது மற்ற மதங்கள்அதை ஒத்துக்கொள்ளவில்லைமனிதன் எந்த நாளும் தெய்வம் ஆக முடியாது என்று திண்ணமாக கருதுகிறது

எனவே இந்து மதம் ஜாதியை ஊக்குவிக்கிறது ஏற்ற தாழ்வை விதைக்கிறது    என்று பழி சொல்லுபவர்கள்இங்குகவனிக்க வேண்டியது மனிதன் இறைதன்மை பெறமுடியும் என்று ஏற்ற தாழ்வை கடவுள் விஷயத்திலேயே இந்துமதம்    காண்பிக்க வில்லை ஆனால் மற்ற மதங்கள் இறைவனுக்கும் மனிதனுக்குமே ஏற்ற தாழ்வை காண்பித்துஒரு நாளும் மனிதன் இறைவன் நிலைக்கு உயரமுடியாது என்று உறுதியாக அடித்து கூறுகிறது


நான் இங்கு இதை எழுதுவது மற்ற மதத்தினரை புண்படுத்த அல்ல மதம்    மாற்றுபவர்கள் எப்படி எல்லாம் இந்து மதத்தை சிறுமை படுத்துகிறார்கள் என்றும் அதுஎந்த அளவுக்கு பொய்யானது என்று விளக்கவே இந்த பதிவு

Sunday, October 18, 2020

Learning Hindi

சுந்தர்பிச்சை ஆங்கிலம் மட்டும் கற்றுக்கொண்டு இன்று கூகுள் தலைவராக வரவில்லையாஎனவே இந்தி படிக்க வேண்டாம் ஆங்கிலம் படித்தால் போதும் என்பதற்கான ஒரு உதாரணம்சுந்தர்பிச்சைஅவருக்கு இந்தி     தெரியாது என்று இந்தியை புறக்கணிக்க ஒரு நியாயமாக எதிர் தரப்பு எடுத்து வைக்கிறது

நாங்கள் மற்ற மாநிலங்கள் போனால் இந்தி அங்கு போய்  கற்றுக்கொள்கிறோம்நாங்கள் ஏன் பள்ளியில் இந்திகற்றுக்கொள்ள வேண்டும் என்றுஎன்று இந்தி படிக்க வேண்டாம் என்பதற்கான ஒரு காரணமாக     எதிர்தரப்பு எடுத்து வைக்கிறது


சுந்தர் பிச்சை நியாயம் ஒரு பார்வை


சுந்தர் பிச்சை என்பது ஒரு rare Phenomena அதை generalise பண்ண முடியாதுஎத்தனை சதவீதம் பேர்   அமெரிக்கா போன்ற வெளிநாடு செல்கிறார்கள்எத்தனை சதவீதம் பேர் Gulf செல்கிறார்கள்எத்தனைசதவீதம் பேர் தமிழகம் தாண்டி மற்ற    மாநிலம் செல்கிறார்கள்ஏறக்குறைய 98% இந்திய கம்பேனியின் அல்லது MNC கம்பேனியின் Headquarters டெல்லியிலோஅல்லது மும்பயிலோதான்     இருக்கும்எனக்கு தெரிந்து Gulf   (அங்கும் இந்தி தெரிந்தால்     சமாளித்து கொள்ளலாம்), மற்ற மாநிலத்திற்கு படிக்கவேலைபார்க்கசெல்பவர்கள்அல்லது தங்கள் தலைமையகத்திற்கு செல்பவர்கள்     சதவீதம் அமெரிக்கா செல்பவர்களின்சதவீதத்தை விட மிக அதிகம்    எனவே சதவீத அடிப்படையில் இந்தி முக்கியத்துவம் பெறுகிறது


பள்ளியில் நான் ஏன் இந்தி படிக்க வேண்டும்வேலை நிமித்தமாக எந்த மாநிலம் சென்றாலும் அங்கு நான் இந்திகற்றுக்கொள்வேன்ஒரு பார்வை


ஒருவர் தமிழகத்தில் தன் தொழிலை ஆரம்பித்து இந்தியா முழுதும் தன்னுடைய தொழிலை விரிவுபடுத்தவேண்டுமானால் இந்தி அவசியம்ஒருவர் தமிழக மாநிலத்தை தாண்டினாலே அவருக்கு தொடர்பு மொழி    இந்திதான்60 ஆண்டு கால தமிழக திராவிட அரசியல் நம்மை    உண்மை உணர விடாமல் செய்கிறது அல்லது உண்மைதெரிந்தும் அதைமறைக்க அல்லது மறுக்க வைக்கிறது என்பது ஒரு துரதிருஷ்டம்


யார் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் இந்தி என்பது    இந்தியாவின் தொடர்பு மொழிஇதுஎந்த சட்ட நிர்பந்தமும்    இல்லாமலேயே பெரும்பாலான மாநிலங்களில் பரவலாக இயல்பாக    பேசப்படும் ஒரு மொழி இந்தி


இந்திய பொருளாதார சந்தை 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்தமிழ்நாட்டின் பொருளாதார சந்தை 290 பில்லியன் டாலர்கள்இங்கு உள்   நாட்டிலேயே இவ்வளவு பெரிய சந்தை இருக்கும் பொழுதுதமிழர்கள்    தங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ள இந்தி கற்றுக்கொள்வது என்பதுதவிர்க்க முடியாத ஒன்றுபுத்திசாலித்தனமான ஒன்றும் கூட


இன்று நேற்றல்ல பல கம்பேனிகளின் தலைமையகம் அது இந்திய    கம்பேனியாக இருந்தாலும் அல்லது Japanese MNC, அல்லது American MNC அல்லது KoreanMNC அல்லது Chinese MNC ஆனாலும் அது டெல்லி   அல்லதுமும்பாயில் தான் பெரும்பாலும் உள்ளது அங்கு சதவீத    அடிப்படையில் மற்ற மாநிலகாரன் தான் அதிகம்அங்கு இந்தியை தன் தாய்மொழியாக கொள்ளாத பஞ்சாபிகுஜராத்திராஜஸ்தானி   வங்காளிபீகாரிஒடிசாகன்னடர்தெலுங்கர்காஷ்மீரிமராட்டியர்    மற்றும் கேரளர் ஆகியோர் வேலை செய்வார்கள்இவர்கள்எல்லோரின் தாய்மொழியும் இந்தி அல்ல ஆனால் மேற்சொன்ன அனைத்து இந்தி    அல்லாத   மாநிலத்தவர்களும் சரளமாக இந்தி பேசுவார்கள்அவர்கள்    அங்குவந்து தான் இந்தி கற்றுக்கொண்டார்களாஇல்லை பள்ளிகளில்    இந்தி படித்து வந்தவர்கள்அதனால் அவர்கள் தாய் மொழி அழிந்து விட்டதாஅல்லது மூன்றாவது ஒரு மொழிகற்றதால் அதிக சுமை சுமந்தார்களா


எனது தற்போதைய American MNC பாஸ் (Indian Head) ஒடிசாவை     சே்ந்தவர்முன்பு வேலை செய்த கம்பேனி Japanese MNCயில் என் பாஸ் முன்பு (IndianHead) ஒரு வங்காளி, பிறகு வந்தவர்    ஒடிசாவை சேரந்தவர்அதற்குமுன்னால் வேலை செய்த Japanese MNC யில் எனது பாஸ் ( Indian Head) முதலில் ஒரு இந்தி சரளமாக பேச 

தெரிந்த தமிழர்பின்பு வந்த Indian head ஒரு பஞ்சாபி இங்கு சொன்ன அத்தனை பேருக்கும் தாய் மொழி  இந்தி அல்ல. Head officeல் meeting 

நடக்கும் பொழுது பலமுறை ஆங்கிலத்தில் இருந்து இயல்பாக இந்திக்கு   conversation சென்று விடும்தமிழர்களை தவிர மற்ற மாநிலத்தை    சார்ந்த யாரும் புரியாமல் நெளியமாட்டார்கள்


அவ்வளவு தூரம் செல்வானேன்அருகில் இருக்கும் கேரளா   மலையாளிகள் எல்லோரும் இந்தி பேசுவார்கள்படித்தவர்கள்    ஆங்கிலமும் இந்தியும் பேசுவார்கள்தாய் மொழி அழிந்து விடும் என்று இந்தியை எதிர்கும் தமிழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உரையாடுவார்கள்ஒரு    திருமணத்திற்கு போனால் பேண்ட் சட்டைதான் உடுத்திக்கொண்டு    போவார்கள்ஆனால் நாம் மலையாளிகளை கவனித்திருக்கலாம்   மலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் கட்டாயம்    மலையாளத்தில் தான்உரையாடுவார்கள்ஆங்கிலம் பயன்படுத்தவே    மாட்டார்கள்ஒரு திருமணத்திற்கு போனால் வேஷ்டி சட்டையில்தான் போவார்கள் (அவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்திருந்தாலும் கூட).    கேரளாவில் மொழி அழிந்துவிட்டதாஅல்லது பண்பாடு அழிந்து    விட்டதாஇரண்டையும் தமிழர்களை விட அவர்கள் நன்றாகவே    இந்தியையும் கற்றுக்கொண்டு இது நாள் வரை காத்து வந்து    கொண்டிருக்கிறார்கள்என்ன அங்கே கெட்டுவிட்டது


இங்கு பெரும்பாலான தமிழர்கள் திராவிட ஊழல்வாதிகளின் பேச்சை கேட்டு தமிழை காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு இந்தி படிக்காமல் இருந்து விட்டு இன்று தமிழில் எழுத தெரியாமல் இருக்கிறார்கள்அப்படிஎழுதினாலும் அவ்வளவு எழுத்து பிழைதமிழை திராவிடம் காத்த    லட்சணம் இதுதான்


இறுதியாகசதவீத அடிப்படையில் சுந்தர்பிச்சைகளை காட்டிலும் வெளிமாநிலம் சென்று வேலை செய்பவர்கள்மிக அதிகம்வேலை    வாய்ப்புகளும்தொழில் வாய்ப்புகளும் இந்தியாவில் மிக மிக அதிகம்


இந்தி கற்றுக்கொள்வதனால் தமிழ் அழியாது தாய்மொழியாக இந்தி    இல்லாத மேற்சொன்ன அத்தனை மாநிலங்களும் சாட்சிஇந்திக்காரன் நம்மை ஆள நாம் இந்தி படிக்க வேண்டுமா என்ற கேள்வியும் அடிபட்டுபோகும் ஏனென்றால் பல MNC பாஸ்களும் இந்திய கம்பேனி பாஸ்களும் பெரும்பாலும் இந்தியை தாய்மொழியாக கொள்ளாதவர்கள்இந்தி பேச தெரிந்தவர்கள்.  


மேற்சொன்ன இந்தி தாய்மொழியாக கொள்ளாத எல்லா மாநிலங்களின் மாணவர்களும் மூன்றாவது மொழியாகஇந்தியை கற்கிறார்கள் Majority of them. 


மற்ற மாநிலங்களின் குழந்தைகள் மூன்றாவது மொழியை    கற்றுக்கொள்ளும் பொழுது தமிழ் குழந்தைகள்மூன்றாவது மொழியை    கற்பதில் என்ன சிரமம்


முடிக்கும் முன்இந்தி மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்வது நம்   மாணவர்கள் மற்ற மாநில மாணவர்களோடு சரி சமமாக உள் நாட்டு தொழில் மற்றும் வேலை வாய்பை கொடுக்கும் விஷயம் என்பது    நடைமுறை நிதர்சனம்

ஆனால் புதிய கல்வி கொள்கையோ அல்லது மத்திய அரசாங்கமோ    இந்தியை தான் மூன்றாவது மொழியாககற்க வேண்டும் என்று    சொல்லவில்லைதிணிக்கவும் இல்லைஎனவே எங்கிருந்து இங்கு இந்தி திணிப்பு வந்ததுஎனவே சாதக பாதகங்களை சீர் தூக்கி பார்த்தால்    மூன்றாவது மொழியாக இந்தி கற்றுக்கொள்வது தமிழக    மாணவர்களுக்கு அதிக பலன் தரும்