Sunday, January 18, 2015

புலம்பல்!!!

புழுதியிலே சூழன்றடித்து சடுதியிற் உனைவிட்டகன்ற சருகு நான், 
ஜென்ம ஜென்மாந்திரமாய் மனத்திற்கண் கவனத்தை வைத்து 
சுயத்தை மறந்த மூடன் நான்,  
இருப்பை விட்டகன்று பறத்தின் பிடியிற்சிக்கி தொலைதூரம் வந்துவிட்டேன், 
களைப்புதீர குளிர் நிழலாய் நீ எனக்கு வேண்டாம், 
வந்து வந்து போகும் வசந்தம் போற் உனதருள் எனக்கு வேண்டாம், 
பால் நினைந்தூட்டும் தாயினும் மேலாம் நீ, 
இந்த நாயினும் கீழொனின் கண்ணில் ஏன் பட்டாய்? 
நீயே என் மேலான துன்பமெல்லாம், 
வாட்டியது போதும், 
பேடி நான் உனைத்திறும்ப உற வழியுரைத்தனை 
அது பாத்திரமறியாது நீயிட்ட பிச்சையன்றோ? 
என் தவறில்லை, அனைத்தும் நின் செயலே, 
இனி வருந்தி பலனில்லை, 
என்னால் ஆவதொன்றுமில்லையெனில், நானெதற்க்கு? 
இறைவ! ஒருவனாம் நீ, சடுதியிற் எனை முடித்தே வாழ்க நீடூழி!!!!

No comments:

Post a Comment