Wednesday, June 24, 2015

அருளில்லா காட்டில் யான்!!!

வினையென்னும் சகதியில் வீழ்ந்தழுந்தியே கிடந்த - என்னை 
கருணையால் ஆட்கொண்ட காரணம் அறிகிலேன்! 
அருணையின் அருட்கண்ணில் பட்டேன் 
அதனருகே ஈர்க்க பெற்றேன்! 
நன்றியில்லா நாயினும் கீழோன் யான் 
பின்னுமதனருமை அறியாமற் மதிமயங்கி 
வயிற்றிற்க்கே வாழ்க்கைப்பட்டேன்! 
தலைவனின் உவப்பில்லோர்க்கு தண்ணியில்லா 
காட்டிற்கண் பணிமாற்றம் செய்வதே உலகவழக்கம்! 
அருள்ரமணா நீயும் அதன்வழி போதல் தகுமோ? 
பின் அருளில்லா காட்டிற் யான் கிடக்க காரணம் யாது கூறு?

No comments:

Post a Comment