Wednesday, June 24, 2015

ராதாவை மாடு முட்ட, முளைத்த பாடல் !

வேத ஆகமங்கள் கற்றுணந்தோர் விழைந்து நட்போடிணங்கும் 
ராதா எனும் நாமம் படைத்த பக்த சிரோனவன்
சிவகாமியுடனும் அபிதகுஜாம்பாளுடனும் காத்திருந்து 
அவர்தம்மை இறைவனோடு சேர்த்து பள்ளியறை புகவைத்து 
அனுதினமும் அவர்தூங்க பாடினவன் - கால காலமாய் 
இப்பணி செவ்வனே செய்வதால் 
அவனை பாம்பு தீண்ட மாடு எத்த நீர்தூங்கிவீட்டீரோ?
பாரும் ஈசரே! இப்படியே நீர் பாராதிருந்தால் 
அர்த்த ஜாமத்திற்வரும் கூட்டத்தில் ஒரு எண்ணிக்கை குறையும் - கவலை வேண்டாம்! 
நீர் தந்த படிப்பினையால் பள்ளியெழுச்சி கூட்ட எண்ணிக்கையில் ஓன்று கூடும் காண்!
ஏதோ வேகத்தில் நின்செயல் வெளிவிட்டேன் யான் 
பாடாய் படுத்திடாதே பாவம் நான் 
உன்னை புகழும் பாடலோன்றும் அறியேன் - பாடலறிந்தவன் 
மாடுஎத்த கிடக்க என் கதி எண்ண கிடுகிடுக்கிறது!

No comments:

Post a Comment