Wednesday, June 24, 2015

தீயோன் சிறப்பு !!!

நான் கவிஞனுமில்லை,நல்ல ரசிகனுமில்லை, 
பக்தனுமில்லை, முக்தனுமில்லை, 
பித்தனுக்கு உகந்தோனில்லை, 
சித்தன் வழி சென்றோனில்லை, 
பார்த்தசாரதி சொல் கேட்டோனில்லை, 
தேவார திருவாசகம் அறிந்தோனில்லை, 
ரிபுகீதை சற்றேனும் கற்றோனில்லை, 
தீயோன் என்னை தனித்தே விட்டால் 
பெருத்த இடர் புரிவன் என்றே, 
அன்பர் பிறப்பை அறுக்கும் மலை 
நல்லோர் பொருட்டு 
எனையும் ஆட்கொண்டததுவே!

No comments:

Post a Comment